வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே

 

 

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே

நீர் வந்திடுவீர் இயேசு அழைக்கின்றாரே

                வந்திடுவீர் வந்திடுவீர்

                வாழவைக்கும் நம் இயேசுவிடம்; 

                               

வறண்டு போன உந்தன் வாழ்க்கைதனை

வற்றாத நீரூற்றாய் மாற்றிடுவார்

லீலி புஷ்பம் போல மலர்ந்திடுவாய்;

லீபனோனைப்போல் வேரூன்றுவாய்(2)  - வந்திடுவீர்

 

வானத்தின் பனியை கொடுத்திடுவார்

பூமியின் கொழுமையை தந்திடுவார்

கன்மலையின் தேனை புசிக்கசெய்வார்

கொழுத்த கன்றாக வளரச்செய்வார்(2) - வந்திடுவீh

 

கசந்துபோன உந்தன் வாழ்க்கைதனை

கனிதரும் வாழ்க்கையாய் மாற்றிடுவார்;

ஏலிமை போல செழிக்கசெய்வார்

எந்நாளும் வாழ்ந்து சுகித்திருப்பாய்  - வந்திடுவீர்